பொதுவாக நரசிம்மனிடம் நாளை என்பது இல்லை என பக்தி பல மொழி. அதற்கேற்ப வணங்கிய உடனே பலனை கொடுக்கக்கூடிய நரசிம்மர் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. எதிர்ப்புகளை நீக்கி துன்பங்களில் இருந்து உங்களை காக்கும் நரசிம்மருக்கு பல்வேறு சிறப்பு தளங்கள் உள்ளன. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ள கனகவல்லி தாயார் உடனுறை லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் குறித்து இந்த பதிவில் காண்போம்.

பிரகலாதன் அசுரன் இரணியனின் மகன். அசுரர் குளத்தில் பிறந்திருந்தால் நாராயணன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அந்த சிறுவன் இரணியனையே கடவுளாக வணங்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மகனே உத்தரவை மீறியதால், இரணியன் மிகுந்த கோபத்திற்கு ஆளானார். நாராயணன் மீது கொண்ட பக்தியால் பெற்ற பிள்ளையை கொடுமைப்படுத்தியதால் திருமால் நரசிம்மர் அவதாரம் எடுத்து அசுரன் இரணியனை அழித்தார். நரன் என்றால் மனிதன் என்றும் சிம்மம் என்றால் சிங்கம் என்றும் பொருள் படும் மனித உடலும் சிங்க தலையும் கொண்ட நரசிம்மர் அவதாரத்தை கண்டு உலகமே நடுங்கியது.
தொழிலில் நஷ்டமா?.. கடன் தொல்லை தீரவும், பண வரவு அதிகரிக்கவும் எளிய வழி..!
இதை அறிந்த மார்க்கண்டயனே மகரிஷி மகாலட்சுமியிடம் நரசிம்மனின் கோபத்தை தணிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன்படியே, பெருமாளின் கோபம் தனியும்படி தாயார்ம் ஆசுவாசப்படுத்தினார் இதன் அடிப்படையிலேயே லட்சுமி மடியில் இருக்கும் நரசிம்மர் வழிபாடு உருவானதாக புராணக்கதை சொல்லப்படுகிறது. இந்த தளத்தில், நரசிம்மர் கோபம் தணிந்து மக்களுக்கு அருள் புரிய வேண்டும் என மகாலட்சுமி வேண்டிய நிலையில் காட்சி கொடுக்கிறார். இத்தகைய நரசிம்மரின் கோலத்தை காண்பது மிகவும் அரிது. இக்கோவிலில், லட்சுமிக்கு முக்கியத்துவம் என்பதால் நரசிம்ம லக்ஷ்மி என பெயர் பெற்று அருள்பாலிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த திருக்கோவில் ஊரின் மையப்பகுதியில் கிழக்கு நோக்கிய ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக கோவில் காட்சி தருகிறது. தரைத்தளத்தில் இருந்து மூன்று அடி படிக்கட்டுகள் வழியாக கீழிறங்கி செல்லும்படி கோவில் அமைந்து இருக்கிறது. கொடி மரத்தை வணங்கி விட்டு சிறிது தூரம் சென்றால், நரசிம்மரை வணங்கியபடி கருட ஹழ்வார் காட்சி தருகிறார். மேலும், கோவில் மண்டபத்தில் நுழைந்தால் தூண்களில் தத்துவமாக அமைந்த தசாவதார காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
அங்கேயே 63 நாயன்மார்கள், விஷ்ணு, துர்க்கை, வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், கோதண்டராமர், லட்சுமி ஹயக்ரீவர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். அர்த்தம் மண்டபத்தில் உற்சவமான வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்று கோலத்தில் காட்சி கொடுக்கிறார். இவர்களுக்கு அருகில் ஹனுமன் அருள்பாலிக்கிறார். கருவறையில் மூலவர் லக்ஷ்மி நரசிம்மவர் தனது இடது தொடையில் மகாலட்சுமி தாயாரை அமர வைத்து அமர்ந்து கோலத்தில் அற்புதமாக அருள்பாளிக்கிறார். தாயார் கூட்டிய வண்ணம் நரசிம்மரை நோக்கி வணங்கி வழி பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்ற நிலையில் காட்சி கொடுக்கிறார். இத்தளத்தின் சிறப்பாக இருக்கிறது.

பிரகாரத்தில் தாயார் கனகவல்லி, ஆண்டால் நாச்சியார், நான்கு கரங்களுடன் கூடிய அனுமன், தனித்துணி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றார். திருமண தடை நீங்கவும் செவ்வாய் தோஷம் விலகவும் திருவாதிரை சதயம் நட்சத்திரங்களில் ஏழரை சனி தோஷம் இருப்பவர்களும் இங்கு பிரார்த்திக்கலாம். ராகு திசை நடப்பவர்களும் கடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டும் என்று கருதுபவர்களும் வழக்குகளில் வெற்றி பெறவும், தம்பதியர் ஒற்றுமைக்கும் லட்சுமி நரசிம்மரை வேண்டிக் கொள்வது ஆயுத்தமாக இருக்கிறது. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் திருமஞ்சனம் செய்து விரலி மஞ்சளால் மாலைக்கட்டியும் தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றி வருகின்றனர்.

