பொருளாதார நெருக்கடி இந்தியாவில் நிலவி வரும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியில் மெலடி சாக்லேட் வழங்கி வருவது தலைமைத்துவம் அல்ல வெறும் விளம்பர அரசியல் என்று காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
“நம் தலைக்கு மேல் ஒரு பொருளாதாரப் புயல் சீறிக்கொண்டிருக்கிறது, ஆனால் நமது பிரதமர் இத்தாலியில் மிட்டாய்களை விநியோகிப்பதில் மும்முரமாக இருக்கிறார்!
விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் என அனைவரும் கண்ணீர் விடுகின்றனர் – பிரதமர் சிரித்துக்கொண்டு காணொளிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார், பாஜகவினரோ உடன் கைதட்டிக்கொண்டிருக்கின்றனர்.
இது தலைமைத்துவம் அல்ல, இது ஒரு கேலிக்கூத்து.”
இவ்வாறு தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த இந்திய பரிசுக்கு நன்றி எனவும் தனது சமூக வலைதளங்களில் பிரதமர் ஜார்ஜியா மெலோடி பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு நன்றி தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
आर्थिक तूफ़ान सर पर है, और हमारे प्रधानमंत्री इटली में टॉफ़ी बाँट रहे हैं!
— Rahul Gandhi (@RahulGandhi) May 20, 2026
किसान, युवा, महिलाएँ, मज़दूर और छोटे व्यापारी सब रो रहे हैं – PM हंसकर रील बना रहे हैं, और BJP वाले ताली बजा रहे हैं।
यह नेतृत्व नहीं, नौटंकी है।

