தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடியது. கூட்டம் கூடியதும் முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார். தமிழக சட்டசபையில் நம்பிக்கை கூறும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது உரையாற்றி வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேசுகையில், மதுவிலக்கு, நீர் மேலாண்மை, பெண்கள் பாதுகாப்பு, விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.
முகத்தை மூடிச் சென்றது யார்?.. பிரேமலதா விஜயகாந்த் எழுப்பிய பகீர் கேள்வி..!
கனிம வளம் கொள்கையை தடுக்க வேண்டும். மணல் கொள்கையை தடுக்க வேண்டும். அனைவருக்கும் தரமான இலவச மருத்துவம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்டவற்றை கூறியிருந்தார். மேலும், போதை இல்லா தமிழ்நாடு என்பதை பாமகவின் நிலைப்பாடு முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுவை ஒழிக்க 40 ஆண்டுகளாக பாமக போராடி வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் மதுப்பழக்கமும் விற்பனையும் அதிகரித்து உள்ளது. ஒரு மதுக்கடையை மூடினால் அருகில் நாலு சந்துக்குடுகளை திறந்து விடுகிறார்கள். முதலமைச்சர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். மதுவை ஒழிக்க தொடர் கண்காணிப்பு தேவைப்படுகிறது தொடர் முயற்சி தேவைப்படுகிறது.
முதலமைச்சர் தலைமையிலான ஆளுங்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை பாமக கொள்கைக்கு ஒத்துப்போகும் வகையில் இருக்கிறது. எனது பேர குழந்தைகள் வளர்ந்து வரும் போது போதையில்லா தமிழகமாக இருக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் எனது ஆசை தான் தமிழ்நாட்டுப் பெண்களின் ஆசையாகவும் இருக்கிறது.
அதனால், போதை மற்றும் மது ஒழிக்க சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சாந்து கடையை திறக்க விடக்கூடாது என்பது தான் தமிழக மகளிர் எதிர்பார்ப்பு நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் இருந்து பாமக விலகி இருக்க விரும்புகிறது என்று தெரிவித்திருந்தார்.

