சட்டசபையின் இரண்டாவது நாள் அமர்வு இன்று தொடங்கியது. இதில், யாரும் போட்டியிடாத சபாநாயகர் ஜேசிபி பிரபாகரனும் துணை சபாநாயகராக ரவிசங்கரன் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர், சபாநாயகர் ஜேசிபி பிரபாகரன் மரபு படி அவை முன்னவர் செங்கோட்டை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் என இரு கைகளை பிடித்து சபாநாயகரை அமர வைத்தனர்.
சட்டமன்றத்தில் திமுக – தவெக மோதல்?நிர்வாகத்தில் திமுக தான் சீனியர்..!
சபாநாயகரை வாழ்த்தி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் சட்டமன்றத்தில், முதன்முறையாக முதலமைச்சர் விஜய் பேசியதாவது, இங்கிலாந்தில் மன்னராட்சி இருந்த காலத்தில் நாடாளுமன்றம் செயல்பட்டு கொண்டிருந்தது மன்னர் ஒரு பணியை செய்ய வேண்டும் என்று விரும்பும் நாடாளுமன்றம் அதை நிராகரிக்கும்.
நாடாளுமன்றத்தின் கருத்தை மன்னரிடம் சொல்ல வேண்டியவர் சபாநாயகர், அதற்கு துணிவு வேண்டும். சில பணிகளை செய்ய நாடாளுமன்றம் அனுமதி வேண்டுமே தவிர மரண தண்டனை அளிக்கும் முடிவு மன்னருக்கு உண்டு தான். விரும்பியதை நாடாளுமன்றம் நிராகரித்ததை சொல்லும்,
சபாநாயகருக்கு மன்னர் மரண தண்டனை விதிப்பார். சபாநாயகர் தலையை வெட்டி விடுவதால், யாருமே அந்த பதவிக்கு வர மாட்டார்கள். நாடாளுமன்றத்தில் புதிய ஆட்சி அமையும் போது சபாநாயகர் அறிவிக்கப்பட்டால், அவர் ஓட்டம் பிடித்து விடுவார், அவை முன்னவரும் எதிர்க்கட்சி தலைவரும் அவரை தடுத்து நிறுத்தி இருக்கையில், அமர வைப்பார்கள். இதுதான் அந்த காலத்தில் இருந்த மரபு.
ஜனநாயக முறையிலும், அந்த மரபு தொடர்கிறது. ஜனநாயகத்தின் இதயமாக இந்த பேரவை செயல்பட வேண்டும். மக்களே மக்களுக்காக நடத்தும் ஆட்சி மக்களாட்சி என ஆபிரகாம் லிங்கன் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகருக்கு உதவியாக செயல்படுவார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை பயன்படுத்தும் திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு பேரவைக்கு இருக்கிறது.
அதிகமான மக்கள் இந்த ஆட்சியில், நன்மை பெற்றுள்ளார்கள் என சொல்லும் வகையில், செயல்பட இருக்க வேண்டும். சட்டமன்ற நடவடிக்கைகள் சீராக செம்மையாக நடக்க வேண்டும். ஒரு உறுப்பினர் உள்ள கட்சிக்கும் அவையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பேரவையில் அனைவரும் சமம் சட்டமன்ற மரபுகள் தேடிப் பாதுகாக்கப்பட வேண்டும். அதிகமான மக்கள் இந்த ஆட்சியில் நன்மை பெற்றுள்ளார்கள் என சொல்லும் வகையில் செயல்பாடு இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசி இருந்தார்.

