மக்கள் வைத்திருக்கும் அன்பும் ஆதரவும் தான் காரணம். ஒரு இயக்கம் வளர வேண்டும் என்றால் தியாகம் செய்ய வேண்டும். அண்ணா, புரட்சி தலைவர், அம்மா அவர்களின் தியாகத்தால் வளர்ந்த இயக்கம் இதனால் அது நிலைக்கிறது. ஆனால் இப்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது.
தான் என்று ஒருவன் நினைத்தால் தெய்வம் தான் என்று காட்டி விடும். தெய்வத்தால் இன்று ஆட்சிக்கட்டிலில் தலைவர் அமர இருக்கிறார். இது மக்கள் சக்தியாக மாறியுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல், முதல் தேர்தலில் மாபெரும் வெற்றி என்பது சரித்திரத்தை படைத்துள்ளது.
“சேவல் கொடி பறக்குது” – தவெக வெற்றிக்காக நேர்த்திக்கடன் செலுத்திய வேல்முருகன்!
மக்கள் நேசிக்கிறார்கள் அவர்களுக்கு என்றும் தலைவர் உறுதுணையாக இருப்பார். அவரது எண்ணங்கள், தொலைநோக்கு பார்வை, மனிதநேயம், அவரிடம் இருக்கிறது ஆகவே ஆட்சி சிறப்பாக இருக்கும். தனிப்பெரும்பான்மை இல்லை என்ற கேள்விக்கு நாளை பொருத்திருந்து பாருங்கள் என்றார்.

