தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 காண வாக்குப்பதிவு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயம் கலை கட்டி உள்ளது. அதிகாலை, முதலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அறிவாலத்தில் குவிய தொடங்கியுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து வெளிவரும் ஆரம்பகட்ட முடிவுகளில், திமுக முன்னிலை பெற்று வருவதை தொடர்ந்து தொண்டர்கள் உற்சாகத்திற்கு சென்றுவிட்டனர். முன்னதாக, சென்னை கொளத்தூர் தொகுதியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்.. ஜோதிடர் ராதன் பண்டிட் அதிரடி கணிப்பு..!
அதை அடுத்து மீண்டும் ஸ்டாரின் மீண்டும் திமுக போன்ற முழக்கங்களும் அறிவாலய வளாகம் முழுவதும் எழுப்பப்பட்டு வருகிறது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில், வளாகத்தில் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் திமுக முன்னிலை பெறும்போது ஆரவாரம் விண்ணை பிளக்கிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவாலயத்திற்கு வருகை தரக்கூடும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

