வால்பாறையில் பலத்த இடி, மின்னலுடன் ஆலங்கட்டி கனமழை பெய்தது.
சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மரம் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது இதனால் சுமார் ஏழு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. பலத்த மழையினால் சாலை அருகே உள்ள மரங்கள் சாய்ந்தன இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த இடி,மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மலையுடன் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்ததில் மின்சாரம் இரண்டு மணி நேரமாக துண்டிக்கப்பட்டது.
டேய் வலிக்குதுடா.. அச்சுறுத்தும் ‘நவீன போதை’ – கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் கும்பல்..! (வீடியோ)
வால்பாறையில் இருந்து சின்னக்கல்லார் எஸ்டேட் செல்லும் சாலையில் மின் கம்பம் மீது மரம் விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்து மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு தேயிலைத் தோட்ட பகுதிகளில் நிழல் மரங்களும் முறிந்து விழுந்து உள்ளது.

