கோவையில் பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கின. சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வால்பாறையில் இடி மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி கனமழை பெய்தது. சூறைக்காற்றால் மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்து 7 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது; போக்குவரத்து பாதிக்கப்பட்டது.