கோடை வெப்பம் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தரை மற்றும் புதர்கள் அதிகமாக சூடாக்கி பாம்புகள் குளிர்ச்சியான இடங்களை தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 54 பேர் பாம்பு கடிக்கு உள்ளாகியுள்ளனர். இதில் ஆறு பேர் உயிரிழந்தது பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!
பொதுவாக குளிர்ச்சியான இடங்களை தேடி பாம்புகள் வீடுகளின் மூலைகள் படுக்கையின் கீழ் போன்ற இடங்களில் ஒளிந்து கொள்கின்றன. வீடுகளுக்குள் புகுந்து மறைந்திருக்கும் விஷ பாம்புகளை மக்கள் தெரியாமல் மிதிப்பது காரணமாக அதிகமாக கடி வாங்குகின்றனர். இதனால் இரவு நேரங்களில் தூங்கக்கூட மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, சுகாதாரத்துறை வீட்டை சுற்றியுள்ள புதிர்களை அகற்றவும் இரவில் தரையில் தூங்காமல் கட்டிலில் தூங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. பாம்பு கடித்தால் பதற்றம் அடையாமல் உடனடியாக அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியும் அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்துகள் தயாராகவே இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், பாம்புகளை கண்டால் அவற்றை பிடிக்கவோ அல்லது அடிக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதற்கு பதிலாக வனத்துறையையோ அல்லது பாம்பு பிடி நிபுணர்களை தொடர்ந்து தொடர்பு கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் கடும் கோடை வெயில் காரணமாக பாம்புகள் வீடுகளுக்குள் புகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தகக்கது.

