விஜய் தான் தமிழ்நாட்டை ஆழ்வார் என தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு எண்ணிக்கை மே நான்காம் தேதி நடைபெறுகிறது.
நேற்று வெளியான கருத்துக்கணிப்பின் படி திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

விஜய் CM ஆவாரா?.. வெளியான எக்ஸிட் போல்.. கம்பு சுத்தும் கட்சி..!
ஒரு சில நிறுவன கருத்துக்கணிப்புகளை தவிர்த்து பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவே அமைந்திருக்கிறது. இந்நிலையில், செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திக்கும் போது கருத்துக்கணிப்புக்கும் வெற்றிக்கும் சம்பந்தமே இல்லை இலங்கையிலும், நேபாளத்திலும், வங்கதேசத்திலும், பஞ்சாப்பிலும், கருத்துக்கணிப்புக்கு பின் மாற்றங்கள் நடைபெற்று இருக்கின்றன.

விஜயின் விசில் புரட்சி தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலக அளவில் தெரியப்போகிறது 200 தொகுதிகளுக்கு மேல் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெரும் விஜய் நிச்சயமாக தமிழ்நாட்டை ஆழ்வார் என்று தெரிவித்துள்ளார்.

