தமிழகத்தில் கடந்த 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெற்றிகரமாக நடைபெற்றது. வருகிற மே நான்காம் தேதி இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்திய கருப்பு கணிப்புகளின் விவரங்கள் வெளியாகி உள்ளன. அதில், தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எடப்பாடிக்கு பிறகு விஜய்தான்.. வைரலாகும் சிங்கமுத்துவின் ஸ்டேட்மெண்ட்..!
அந்த வகையில், NDTV- PEOPLE’S PULSE நடத்திய கருத்து கணிப்பில் திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகளும், அதிமுக கூட்டணி 65 முதல் 80 தொகுதிகளும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 18 முதல் 24 தொகுதிகளும் மற்றவை இரண்டு முதல் ஆறு இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல் REPUBLIC TV P MARQ வில் திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகள் வரை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 65 முதல் 85 இடங்களையும் தமிழக வெற்றிக்கழகம் 16 முதல் 26 தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும் மற்றவை ஒன்று முதல் இரு இடங்களை கைப்பற்றும் எனவும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் MATRIZE நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 122 முதல் 132 தொகுதிகளும் அதிமுக கூட்டணி 87 முதல் 110 தொகுதிகளும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழக வெற்றிக்கழகம் பத்து முதல் 12 தொகுதிகள் மற்றவை ஒன்று முதல் ஆறு இடங்களிலும் வெற்றி பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக, ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகளில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி 98-120 இடங்களை பிடிக்கும் என அறிவித்துள்ளது. திமுக அதற்கு அடுத்த இடத்தில் 92-120 இடங்களை பிடிக்கும் என அறிவித்த நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

