நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, சமூக வலைதளங்களில் தன்னை குறிவைத்து நடத்தப்படும் மார்பிங் (Morphed) புகைப்படங்கள் மற்றும் இணையவழித் துன்புறுத்தல்கள் (Online Abuse) குறித்து மிகுந்த வேதனையுடன் மனம் திறந்துள்ளார். தனது புகைப்படங்களை மார்பிங் செய்து தவறாகப் பரப்பி வரும் விஷமிகளின் செயல் குறித்து அவர் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
கோவில் குளத்தில் விழுந்த சாப்ட்வேர் பெண் இன்ஜினியர்.. உயிரிழப்புக்குக் காரணம் என்ன?..
“இந்த மாதிரி செயலில் ஈடுபடுபவர்களைத் தடுக்க நான் 100 கோடி ரூபாய் கொடுத்தாலும், அவர்கள் திருந்தப் போவதில்லை” என்று அவர் விரக்தியுடன் கூறியுள்ளார். இத்தகைய இணையத் துன்புறுத்தல்கள் தனிப்பட்ட ரீதியில் எந்த அளவுக்கு மனஉளைச்சலைத் தருகிறது என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரபலங்கள் என்பதால் மட்டுமே தங்களை இப்படியெல்லாம் காயப்படுத்தலாம் என்று நினைப்பது தவறு என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

