தேவையான பொருட்கள்
- வாழைப்பூ – 1 (நடு நரம்பை நீக்கி, பொடியாக நறுக்கியது)
- பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி – 2 (நறுக்கியது)
- இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
- மல்லித் தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
- கடுகு, சோம்பு, கறிவேப்பிலை – தாளிக்க
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
அரைக்க
- தேங்காய்த் துருவல் – 1/2 கப்
- சோம்பு – 1/2 தேக்கரண்டி
- முந்திரி – 4 அல்லது கசகசா – 1 தேக்கரண்டி (குருமா கெட்டியாக வர)
செய்முறை
Step 1: நறுக்கிய வாழைப்பூவை மோர் கலந்த நீரில் சிறிது நேரம் ஊறவைத்தால் கருக்காமல் இருக்கும். பின் அதை நன்றாக வேகவைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
Step 2: மிக்சியில் தேங்காய், சோம்பு, முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும்.
Step 3: வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பின் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அடிக்கடி சாப்பிடலாம்.. குழந்தைகளுக்குப் பிடித்தமான ராகி லட்டு..!
Step 4: இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
Step 5: வேகவைத்த வாழைப்பூவைச் சேர்த்து மசாலாவுடன் நன்கு கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
Step 6: மசாலா வாசனை போனதும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து, கரம் மசாலா தூவி ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சுவையான, சத்தான வாழைப்பூ குருமா தயார்! இதை இட்லி, தோசை, சப்பாத்தி அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

