தேவையான பொருட்கள்
- ரவை – 1 கப்
- சர்க்கரை – 3/4 கப்
- மைதா / கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
- பால் அல்லது தண்ணீர் – தேவையான அளவு
- எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
Step 1: ஒரு பாத்திரத்தில் ரவை, சர்க்கரை, மைதா (அல்லது கோதுமை மாவு) மற்றும் ஏலக்காய் தூள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
Step 2: இதில் தேவையான அளவு காய்ச்சிய பால் அல்லது தண்ணீர் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு நன்கு கரைத்துக் கொள்ளவும். ரவை ஊறுவதற்காக இந்த மாவை 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும்.
‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!
Step 3: 20 நிமிடங்களுக்குப் பிறகு ரவை நன்றாக ஊறி மாவு சற்று கெட்டியாகியிருக்கும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் அல்லது பால் சேர்த்து மீண்டும் தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.
Step 4: கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், ஒரு குழி கரண்டியால் மாவை எடுத்து எண்ணெய்யின் நடுவே மெதுவாக ஊற்றவும்.
Step 5: அப்பம் தானாக எழும்பி வெந்து வரும்போது, அதைத் திருப்பிப் போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுத்தால், சுவையான, மொறுமொறுப்பான ரவா அப்பம் தயார்!

