இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இசைப் பதிப்புரிமை தொடர்பான சட்டப் போராட்டத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
134 பாடல்களின் பதிப்புரிமை முழுமையாகத் தனக்கே சொந்தமானது என்றும், அவற்றை மற்றவர்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் இளையராஜா தரப்பு தாக்கல் செய்த இடைக்கால மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
ப்பா.. என்ன பொண்ணுடா.. எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘டாக்ஸிக்’..!
இந்தப் பாடல்களைப் பயன்படுத்துவதிலோ அல்லது உரிமை தொடர்பாகப் பிறருக்குத் தடை விதிப்பதிலோ எந்தவொரு இடைக்கால உத்தரவையும் வழங்க முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இது இளையராஜா தரப்பிற்கு ஒரு தற்காலிக பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், இது இறுதித் தீர்ப்பு அல்ல; பதிப்புரிமை யாருக்கு என்பது குறித்த விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளரின் படைப்புரிமையா அல்லது தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையா என்ற விவாதத்தில், இந்த வழக்கு மிக முக்கியமானது.
இந்தியத் திரைப்பட இசைத் துறையில் பதிப்புரிமை தொடர்பான சட்ட முன்னுதாரணங்களை மாற்றக்கூடிய அல்லது உருவாக்கக்கூடிய ஒரு முக்கிய வழக்காக இது கருதப்படுவதால், இதன் இறுதித் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

