திருமண விழாவில் த்ரிஷாவும் ஆர்த்தியும் ஒன்றாகச் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி, பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் சில கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஜெயம் ரவியுடனான பிரிவுக்குப் பிறகு, தனது திருமண வாழ்க்கை பாழாவதற்கு மற்றொரு பெண் தான் காரணம் என்று ஆர்த்தி வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே ஏற்பட்டுள்ள விரிசலுக்கு த்ரிஷா தான் காரணம் என்று இணையத்தில் சில வதந்திகள் பரவி வருகின்றன.
இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!
“தன் வாழ்க்கையை மற்றொரு பெண் கெடுத்துவிட்டார் என்று கூறும் ஆர்த்தி, அதே போன்ற வதந்திகளைச் சந்தித்து வரும் த்ரிஷாவுடன் எப்படி இவ்வளவு மகிழ்ச்சியாகப் புகைப்படம் எடுக்கலாம்?” என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
மறுபுறம், த்ரிஷாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். விஜய்யின் தனிப்பட்ட விஷயங்களில் த்ரிஷாவை தேவையில்லாமல் இழுக்கிறார்கள் என்றும், ஒரு திருமண விழாவில் சாதாரணமாக எடுத்த புகைப்படத்தை இப்படி தவறாகப் பேசக்கூடாது என்றும் கூறி வருகின்றனர்.

