அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி கொடுத்திருந்த கட்டாயக் கருக்கலைப்பு மற்றும் ஏமாற்று மோசடிப் புகார், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சாந்தினி, தனக்கு நடந்த நம்பிக்கை துரோகங்களைக் கண்ணீருடன் விவரித்துள்ளார்.
தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, 5 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்ததாகவும், அந்த காலகட்டத்தில் 3 முறை வலுக்கட்டாயமாகக் கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் சாந்தினி குற்றம் சாட்டியுள்ளார்.
பேசினாலே பிராப்ளம்.. விமர்சிப்பவர்களுக்குத் பதிலடி கொடுத்த ரஜினி..!
கடந்த 2021-ல் தனது வீட்டில் பெட்ரோல் பாம் வீசப்பட்டதாகவும், பின்னர் ‘ராஜ்யசபா எம்பி’ பதவி கிடைக்கப் போவதால் வழக்கை வாபஸ் வாங்குமாறு அரசியல் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் கூறினார். மணிகண்டன் நேரில் வந்து வாழ்வாதாரத்திற்கு உதவி செய்வதாக மன்னிப்பு கேட்டதால் வழக்கை வாபஸ் பெற்றதாகவும், ஆனால் வாபஸ் பெற்ற இரண்டே நாட்களில் அவரது போன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு, கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளதாகவும் சாந்தினி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் சாந்தினி மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். இன்று நடைபெற்ற இரண்டாவது சம்மன் விசாரணைக்கும் மணிகண்டன் ஆஜராகவில்லை. மாறாக, அவரது வழக்கறிஞர்கள் மகளிர் ஆணைய அலுவலகத்திற்குள் புகுந்து, அதிகாரிகளையே மிரட்டி பெரும் ரகளையில் ஈடுபட்டதாக சாந்தினி செய்தியாளர்களிடம் கண்ணீர்மல்கக் கூறினார்.
இந்த மோசடியால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறி, அதற்கான மருத்துவச் சான்றிதழ்களையும் சாந்தினி மகளிர் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார்.

