உத்திரமேரூர் அருகே ஆட்டோ ஓட்டுநரை முன்விரோதம் காரணமாக ஐந்துக்கும் மேற்பட்ட கும்பல் சராமாறியாக வெட்டி படுகொலை ஒருவர் கைது தலைமறைவான குற்றவாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பாப்பநல்லூர் காட்டு பகுதியில் ஆண் சடலம் ஒன்றும், அருகில் ஆட்டோ ஒன்றும் இருப்பதாக உத்திரமேரூர் போலீசாரருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தையும், ஆட்டோவையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் இறந்து போன நபர் உத்திரமேரூர் அடுத்த பருத்திக்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ்குமார் வயது 35 என்பது தெரியவந்தது.
அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!
அதைத் தொடர்ந்து, சுரேஷ்குமார் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சென்னை திருமுல்லைவாயிலைச் சேர்ந்த சம்பத் என்பவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த கொலை வழக்கில் ஐந்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என்றும், இந்த கொலை முன் விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என்றும், காவல்துறையினர் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கொலை குற்றவாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உத்திரமேரூரில் 5 பேர் கொண்ட கும்பலால் ஆட்டோ ஓட்டுனர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

