முன்னதாக மே 25 அன்று ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று தற்போது இந்த வரம்பு ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
- கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்குக் கடன் தொகை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது.
- ரூ.75,000-க்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு நிலையான தொகையாக ரூ.35,000 தள்ளுபடி செய்யப்படும்.
- மே 1, 2025 முதல் பிப்ரவரி 28, 2026 வரையிலான காலகட்டத்தில் பெறப்பட்ட கூட்டுறவு பயிர்க்கடன்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
உணவு, தண்ணீர் தட்டுப்பாடா?.. வணிக வளாக கட்டிடத்திற்குள் புகுந்த புள்ளிமான்..!
- இதன் மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 14.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். இதற்காகத் தமிழக அரசுக்கு ரூ.5,932.23 கோடி கூடுதல் நிதிச் சுமை ஏற்படும்.
- ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதலின்படி, நிதி ஆதாரங்களை ஆய்வு செய்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் எவ்வித கடன் சுமையுமின்றி வரும் சாகுபடி பருவத்திற்குப் புதிய கடன்களைப் பெற்றுப் பயனடையலாம் என அரசு தெரிவித்துள்ளது.

