சமந்தா முதன்மைப் பாத்திரத்தில் நடித்து, அவரது சொந்தத் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘எங்கள் தங்கம்’ (தெலுங்கில் ‘மா இண்டி பங்காரம்’) திரைப்படம் ஜூன் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ராஜ் மற்றும் டி.கே கதையில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் சமந்தா தன் சினிமா கேரியர் குறித்துப் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்.
சமந்தா பகிர்ந்த வாழ்நாள் பாடம்
முன்பெல்லாம் சினிமா என்பது தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய ஒரு ஓட்டப்பந்தயம் என்றுதான் நினைத்தேன். எப்படியாவது அந்தப் போட்டியின் இறுதிவரை சென்று வெற்றிக் கோட்டைத் தொட்டுவிட வேண்டும் என ஓடினேன்.
ஆனால், காலப்போக்கில் எனக்குள் ஏற்பட்ட முதிர்ச்சியால் ஒரு விஷயத்தை உணர்ந்தேன். உண்மையில் இங்கே அப்படி ஒரு பந்தயமே கிடையாது. நாம் ஓடிச் சென்று பிடிக்க வேண்டிய எல்லைக்கோடு (Finishing Line) என்பதே இங்கு இல்லை என்பதை மிகத் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன்.
தமிழக விவசாயிகளுக்குப் பம்பர் ஆஃபர்.. ரூ.75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கும் தள்ளுபடி..!
முதலிடத்திற்கான போட்டி மற்றும் கடுமையான ஓட்டங்களைத் தாண்டி, தனக்குப் பிடித்தமான நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதும், அதில் கிடைக்கும் ஆத்மதிருப்தியுமே முக்கியம் என்பதைச் சமந்தா தெளிவுபடுத்தியுள்ளார்.

