வெயில் காலம் வந்தாலே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையாக உடலுக்கு வந்து கொண்டே தான் இருக்கும். அந்த வகையில், அதிகரித்துக்கொண்டே இருக்கும். வெயிலின் தாக்கத்தால் பல நீரிழிப்பு உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் சிரமப்படுவார்கள். முக்கியமாக குழந்தைகள் கோடை காலத்தில் பெரியவர்களை விட அதிகமாக உடல் சூட்டினால் அவதிப்படுவார்கள்.
காலையில் இந்த 5 மாற்றங்கள் இருக்கா?.. உங்க கிட்னி ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் Symptoms..!
இதை தவிர்க்க வேண்டுமானால், வெயிலில் சுற்றுவதை நிறுத்திவிட்டு உடலை நீரூற்றுடன் வைத்துக்கொள்ள வேண்டும். உடல் நீரூற்றுடன் இருக்க வேண்டுமானால் அதற்கு நீரை அதிகமாக குடிப்பது மட்டுமின்றி ஜூஸ் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் காய்கறிகளை உண்ணலாம். அதுவும் தினமும் சமைக்கும் போது உணவில் குறிப்பிட்ட காய்கறிகளை சேர்த்து வரும்போது கோடையில் சந்திக்கும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
வாழைத்தண்டு

பொதுவாகவே நார்ச்சத்து நீர்ச்சத்து நிறைந்த காய்கறியாகும். இது குடலில் இருக்கக்கூடிய நல்ல பாக்டீரியாக்களுக்கு நல்லது. ஏனெனில், நமது உடலில் இருக்கும் பாக்டீரியாவளுக்கு மிகவும் பிடித்தது என்றால், அது நார் சத்துதான். இந்த நார்ச்சத்து வாழைத்தண்டில் ஏராளமாக இருக்கிறது. உங்கள் குடல் எப்பொழுதும் குளுகுளுவென்று ஆரோக்கியமாக இருக்க நீங்கள் விரும்பினால் வாழைத்தண்டை அதிகமாக உட்கொள்ளுங்கள். உடல் சூடு பிடிக்க கூடாது என்று நினைத்தால் வாழைத்தண்டை கோடை காலத்தில் எடுத்துக் கொள்வது சிறப்பானது.
சுரக்காய்

நீர்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம், குளோரைடு போன்ற எலக்ட்ரோலைட்கள் உடலில் இருக்கக்கூடிய நல்ல பாக்டீரியாவுக்கு மிகவும் பிடிக்கும். கோடைக்காலத்தில் அதிகம் சந்திக்கக்கூடிய பிரச்சனை என்றால் அது நீரிழப்பு தான், இந்த காய்கறிகளை அடிக்கடி வாங்கி சாப்பிடும் பொழுது அப்படிப்பட்ட பிரச்சனைகளை கூட விரைவில் சரி செய்யலாம்.
வெள்ளை பூசணி

வெள்ளை பூசணியிலும் நீர்ச்சத்து அதிகமாக நிறைந்து இருக்கிறது. இந்த பூசணியை கோடை காலத்தில் அடிக்கடி வாங்கி சமைத்து சாப்பிடும் போது உடல் வறட்சி உடல் சூடு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது.
கீரைகள்

அதிகப்படியான நார்சத்துடன் இருக்கிறது. உடல் சூட்டை கட்டுப்படுத்தக்கூடிய பண்புகளும் கீரைகளுக்கு இருக்கிறது. அதோடு, கோடை காலத்தில் விலை குறைவில் அதிகம் கிடைக்கக்கூடிய ஒன்று என்றால் கீரைகள் தான் இதில் ஏராளமான இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, கட்டாயம் கீரைகளை வாரத்திற்கு இரண்டிலிருந்து மூன்று முறை உணவில் சேர்த்து வர வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் கூட்டு பொறியியல் குழம்பு என வைத்து சாப்பிட்டால், வெரைட்டியான உணவுகளையும் சாப்பிடலாம். சத்தான உணவுகளையும் உடலுக்கு கொடுக்கலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

