மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார் ஆகியோர் திருவான்மியூர் குப்பம் பகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் மீனவ மக்களிடம் தேவைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டனர். செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பவியல்அமைச்சர் குமார் பேட்டி.
கலெக்டரேட் முன்பு நள்ளிரவில் பயங்கரம்.. சாப்பிட்டுக் கொண்டிருந்த வாலிபருக்கு நேர்ந்த சோகம்..!
நான் சொன்னதன் அடிப்படையில் இங்கு வந்து ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அடிப்படை வசதிகளை அமைத்து தர வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் சொன்னது படி செயல்படுவோம்.
மீன்வளத்துறை அமைச்சர் ஶ்ரீநாத் பேட்டி
மக்கள் அடிப்படை பிரச்சினைகளை தெரிவித்தார்கள். அதனை குறித்துக் கொண்டோம் முதலமைச்சரிடம் இதை கொண்டு சேர்ப்போம். பட்டா பிரச்சனை, சாலை வசதி , தெரு விளக்கு போன்ற பிரச்சினைகளை தெரிவித்தார்கள். ஒரு வாரத்தில் ரிப்போர்ட் கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
இதை சரி செய்ய இரண்டு முதல் மூன்று மாதங்களாகும் என்று தெரிவித்திருக்கிறார்கள் என்றார். எங்கள் முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகள் உரிய காலத்தில் நிறைவேற்றப்படும் என தெரிவித்த அமைச்சர்கள்,
கச்சத்தீவு மீட்பு தொடர்பாக அமைச்சர் ஸ்ரீநாத்திடம் கேட்ட கேள்விக்கு அமைச்சர் குமார், பல முறை No comments என சொல்லிவிட்டு தவிர்த்தார்.
மேலும், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் பகுதியில் வருவதால் இதில் எப்படி சாத்தியம் என கேட்டதற்கு மீனவர்களுக்கு என்று சிறப்பு சலுகை உள்ளது அதன்படி செய் செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம், என்றார்.மேலும் பட்டா பிரச்சனை என்பது இந்த தொகுதியில் அதிகமாக இருக்கிறதே என்ற கேள்விக்கும், No comments என பதில் அளித்து சென்றார் அமைச்சர் குமார்.

