பிரதமர் மோடி சமீபத்தில் நாட்டு மக்களுக்கு சில வேண்டுகோளை விடுத்து இருந்தார். அதாவது, பெட்ரோல் டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும். பொது போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்ப்பதன் மூலமும் பெட்ரோல் டீசல் மற்றும் அன்னிய செலாவணி கையிருப்பை பாதுகாக்க உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கு கூடுதல் வரி அல்லது கூடுதல் கட்டணம் விதிப்பதற்கான ஒரு திட்டத்தை அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இதை பிரதமர் மோடி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தள வலை பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மக்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு வரி விதிக்க போவதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும், இதில் துளி அளவும் உண்மையில்லை. எனவும், வெளிநாட்டு பயணத்தின் மீது அத்தகைய கட்டுப்பாட்டுகளை விதிப்பது என்ற பேச்சுக்கே தற்போது இடமில்லை எனவும், தங்களுக்கு மக்களுக்கும் வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் வாழ்வதை எளிதாக்குதல் ஆகியவற்றை மேம்படுத்துவதில் உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

