தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், தமிழகத்தின் 17 வது சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதல் நபராக முதலமைச்சர் விஜய் பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து, மற்ற எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து பொறுப்பேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
யார் அந்த கிங்?.. நேருக்கு நேர் சந்தித்த எஸ்.பி.வேலுமணி – செந்தில் பாலாஜி..!
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் தற்காலிக எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டதை தொடர்ந்து நாளை முறைப்படி சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக நாளை சட்டசபை கூடுகிறது. எதிர்க்கட்சி சார்பில் வேறு ஒருவரை சபாநாயகர் முன்மொழிந்தால், குரல் வாக்கெடுப்பு நடைபெறும் இல்லையென்றால், ஜே சி டி பிரபாகர் ஒருமனதாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
தமிழக வெற்றி கழகம் சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜேசிடி பிரபாகர் சபாநாயகராக போட்டியிடுகிறார். இதற்கான, தேர்தலில் போட்டியிடுவதற்கான படிவங்களை பேரவை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் அவர் வழங்கினார்.

