தமிழக சட்டசபை இன்று கூடியது. சட்டசபை நிறைவடைந்த உடன் முதலமைச்சர் விஜய் அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்துவதற்காக மரியாதை நிமித்தமாக ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவர்களையும் அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
அந்த வகையில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு க ஸ்டாலினை முதலில் சந்தித்தார். அவரை தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். வைகோவை தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் அவர்கள் நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கு நேரில் சென்றார்.
இதையடுத்து, முதலமைச்சர் விஜய் சென்னை நீலாங்கறையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்திற்கு சென்றார். வீட்டிற்கு வருகை தந்த விஜயை வாசலில் காத்திருந்து ஆரத்தழுவி சீமான் வரவேற்றார். அவரது கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்றார்.
பின் முதலமைச்சர் விஜய்க்கு பூங்கொத்து, சால்வைகள் அணிவித்து சீமான் அவருக்கு புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். அதோடு, விஜயும் சீமானுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் இருவரும் அமர்ந்து சிறிது நேரம் பேசினார். இதையடுத்து, முதலமைச்சர் விஜயை வாசல் வரை வந்து சீமான் வழி அனுப்பி வைத்தார். அரசியல் தலைவர்களை அவர்களின் இல்லங்களுக்கே சென்று முதலமைச்சர் விஜய் சந்தித்து பேசி இருப்பது முதிர்ச்சியான அரசியல் செயல்பாடு என பலரும் பாராட்டிய வருவது குறிப்பிடத்தக்கது.

