திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அறிவொளி நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவர் ஆரம்ப காலத்தில் இருந்து விஜய் நற்பணி மன்றம் மற்றும் விஜய் மக்கள் இயக்கங்களில் இருந்து தற்போது தமிழக வெற்றி கழகத்தின் பல்லடம் பகுதி இணைச் செயலாளராக உள்ளார்.
இவரது தந்தை திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் கோழி கடை நடத்தி வந்தார் தற்பொழுது அதனையே இவர் கவனித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பெரிய அளவில் வசதி இல்லாத சூழலிலும் இவருக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பல்லடம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பேரில் பல்லடம் பகுதியில் போட்டியிட்ட இவர் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் மற்றும் திமுக எம்.எல்.ஏ க.செல்வராஜ் என்ற இருவரை எதிர்த்து களம் கண்டார்.
யாருக்கு ஆட்சி?.. ஆளுநரைச் சந்திக்கச் செல்லும் அரசு உயர் அதிகாரிகள்..!
இரண்டு கட்சிகளும் அதிக அளவில் பணம் செலவழித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில் பிரச்சாரத்திற்கு போதிய பணம் இல்லாமல் ஆங்காங்கே தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பல்லடம் தொகுதி மிகப்பெரிய தொகுதி என்பதால் எந்தெந்த பகுதிகளில் பல்லடம் தொகுதி வருகிறது என்பதை கண்டறிந்து இவர்களால் முழுமையான பிரச்சாரம் கூட செய்ய முடியாத நிலையில் இருந்தது பல்வேறு பகுதிகளை பிரச்சாரம் செய்ய முடியாமலும் முகவர்கள் அமைக்க முடியாமலும் திணறினர்.
ஆனாலும் பல்லடம் தொகுதியில் இவருக்கு அமோகமான வரவேற்பு கிடைத்துள்ளது. இவரை எதிர்த்து போட்டியிட்ட இரண்டு கட்சியின் முக்கிய வேட்பாளர்களை கடந்து 37942 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக – 82761
திமுக – 77804
தவெக- 120703
நாதக – 13038
தமிழக வெற்றி கழக வேட்பாளர் K. ராம்குமார் 37942 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

