கோவை, மத்திய சிறையில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டம் செங்குந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரது மகன் கார்த்திகேயன் (வயது 33 ) என்பவர் கடந்த 2025 ஆம் ஆண்டு திருப்பூரில் நடந்த வழக்கு தொடர்பாக தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில், சிறைச் சாலையில் 7 வது பிளாக்கில் உள்ள அறையில் இருந்த கார்த்திகேயனுக்கு நேற்று திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. அங்கு மயங்கி விழுந்த அவரை சிறை கவலர்கள் கோவை மத்திய சிறைச் சாலை உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினர். இதைத் தொடர்ந்து கார்த்திகேயன் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
திமுக கூட்டணியில் விரிசலா? தவெக வெற்றியை பட்டாசு வெட்டி கொண்டாடிய காங்கிரஸ்..!
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பாதிப்பால் ஏற்பட்ட பிரச்சனையில் கார்த்திகேயன் இறந்து விட்டதாக கூறினர். இதைத்தொடர்ந்து, கார்த்திகேயன் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து, கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் சிறைச்சாலை வார்டன் திருமலை புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், இந்த சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

