கோவை, கண்ணப்பநகர் பகுதியில் மதுபானக் கடை அருகே இருந்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) திடீரென வெடித்துச் சிதறி தீப்பற்றிய சம்பவம் மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கோவை, கண்ணப்பநகர் 11 to 11 டாஸ்மாக் பார் அருகே அமைந்து உள்ள அந்த டிரான்ஸ்பார்மரில் நேற்று காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டது.
வெடித்த வேகத்தில் டிரான்ஸ்பார்மருக்குள் இருந்த ஆயில் அனலாய் சிதறி அருகில் நின்றிருந்தவர்கள் மீது பட்டது. இதில் அங்கு இருந்த மதுரை வீரன் (23) என்ற வாலிபருக்கு உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவருடன் இருந்த மேலும் இருவர் லேசான காயங்களுடன் தப்பினர். காயம் அடைந்த மதுரை வீரன் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். மற்ற இருவர் முதலுதவிக்குப் பின் வீடு திரும்பினர்.
இந்த விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்தப் பகுதி முழுமைக்கும் மின் இணைப்பை நிறுத்தி சீரமைப்புப் பணிகளில் இறங்கினர். இதனால் கண்ணப்பநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, டிரான்ஸ்பார்மர் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

