கோவை வடக்கு, சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளின் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் விருந்து பரிமாறி தி.மு.க வினர் உபசரித்தது சர்ச்சை கிளப்பி உள்ளது.
கோவை, வடக்கு தொகுதிக்கு உட்பட்ட கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி, சங்கனூர் சாமி கவுண்டன் வீதி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, மணியகாரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மேலும் பல வாக்கு சாவடிகளில் பணி புரியும் தேர்தல் அதிகாரிகளும் முதல் பணியாளர்கள் வரை அனைவருக்கும் பிரியாணி உள்ளிட்ட பல்வேறு உணவு பரிமாறப்பட்டது.
தேர்தல் நாளுக்கு முந்தைய நாள் இரவும் தேர்தல் நாள் அன்றும் காலை, மதியம் இரவு நேரத்துக்கான உணவு மற்றும் காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டி மற்றும் சாப்பாடு ஆகியவற்றை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பரிமாறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க வினர் செய்திருந்தனர்.
‘பாகுபலி’ யானைக்கு நேர்ந்த கொடுமை.. வனப்பகுதியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!
இதற்காக எந்த தொகையையும் அதிகாரிகளிடமும், பணியாளர்களிடமோ பெற்றுக் கொள்ளவில்லை. இது குறித்து விசாரணையில் இறங்கிய வடக்கு தொகுதி சுயேச்சை வேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். இதை அடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார்.

