பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செந்தில் பாலாஜி காந்தியவாதி போல் காட்டிக்கொள்வார் தவறுகளை ஒப்புக்கொள்ள மாட்டார் என விமர்சித்திருந்தார். இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு ஒரு நபருக்கு 5000 பணம் பட்டுவாடா செய்த வழக்கில் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உட்பட 5 பேர் மீது கோவை ராமநாதபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது தவறு என்றும் பணம் கொடுப்பதும் வாங்கிவதும் தவறு என செந்தில்பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருப்பது. பேசும் பொருளாகி உள்ளது.
IAS, IPS கனவா?.. மாணவர்களுக்கு சைலேந்திரபாபு கொடுத்த ஸ்பெஷல் டிப்ஸ்..!
கோவையில், கோவை மாவட்டதுக்கு என வாக்குறுதி வெளியிட்ட செந்தில்பாலாஜி , கடந்த திமுக ஆட்சியில் வெளியிட்ட அதே வாக்குறுதிகளை அறிவித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பணம் பட்டுவாடா கோவை தெற்கு தொகுதியில் அதிகம் இருப்ப்தாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும், பணம் பட்டுவாடா குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு பணம் வாங்குவதும் கொடுப்பதும் தவறு என தெரிவித்தார். மேலும், திமுக தரப்பில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுகள் கொடுப்பதாக எழுப்பிய கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத செந்தில் பாலாஜி மற்ற கட்சியினர் என்ன தருகிறார்கள் என சொன்னால் அரசியல் நாகரீகம் இருக்காது என புது விளக்கம் அளித்தார்.

