நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ (Jana Nayagan), இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், இணையத்தில் கசிந்துள்ளதாக வெளியான தகவல்கள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்படத்தைத் தயாரித்துள்ள KVN Productions, இதைச் சட்டவிரோதமாகப் பகிர்வோர் மீது கடும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

“ஆயிரக்கணக்கான உழைப்பாளர்களின் கனவைச் சிதைக்க வேண்டாம்”
எனத் தயாரிப்பு நிறுவனம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசியல் வசனங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மறுஆய்வு (Review) காரணமாகப் படத்தின் சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மே அல்லது ஜூன் மாதத்தில் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

பெண்களிடம் அத்துமீறல்?.. ரகளை செய்து கேமராவை உடைத்த வாட்டர் மெலன் ஸ்டார்..!
ஆனால், சமீபத்தில் முழு திரைப்படமும் ஹெச்டி தரத்தில் பைரசி தளங்களில் லீக் ஆனது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சினிமா துரைக்கு இது மிகப்பெரிய ஆபத்து என பல முன்னணி நடிகர்கள் மற்றும் நட்சத்திரங்கள் இது குறித்து குரல் கொடுத்தும் இருந்தனர். இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் புகார் அளித்திருந்தது.

அதனை தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு ஆறுபேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், மேலும் மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து இருக்கின்றனர். திரைப்படத்தின் எடிட்டிங் நடந்த ஸ்டுடியோவில் நுழைந்து முழு படத்தையும் திருடிய வேறு ஒரு படத்தின் எடிட்டரை போலீசார் தற்போது, கைது செய்து இருக்கின்றனர். ஃப்ரீ லான்ச் எடிட்டர் ஆக பணியாற்றி வரும் அந்த நபர் ஸ்டுடியோவில் ஜனநாயகன் பட காட்சிகளை எடுத்து அதை கோர்த்து, படமாக லீக் செய்து இருக்கிறார் என போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் மிக தீவிரமாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

