வாட்டர் மெலன் ஸ்டார் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்பவர் திவாகர். இவர் ஆரம்ப காலகட்டத்தில் இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் போட்டுக் கொண்டிருந்த அவருக்கு ஜாக்பாட் அடித்தது போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கிருந்து வெளியே வந்த அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

மிஸ்டர் செல்லம்.. உதயநிதி கிட்ட கேட்க முடியுமா?.. விஜய்யை சீண்டிய பிரகாஷ் ராஜுக்கு விழுந்த பதிலடி..!
அங்கு தன்னை கானா வினோத், புகழ், மாகாபா ஆனந்த் ஆகியோர் சேர்ந்து தாக்கி விட்டதாக சில நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அது மட்டும் இன்றி மாகாபா ஆனந்த் மது அருந்திவிட்டு தன்னை அடித்ததாகவும், விலக்கி விட வந்த அறந்தாங்கி நிஷா, சுனிதா ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து மாகாபா ஆனந்த் சமீபத்தில் செய்தியாளர்களை சந்திக்கையில், செட்டில் ஒரு பெண்ணின் கணவருக்கு முன்பே அந்த பெண்ணின் தோல் மேல் கை போட்டு இத்தனை நாள் நீ உன் கணவரோடு இருந்துவிட்டாய் என்னோடு கொஞ்ச நாள் இருக்கிறாயா என்று கேட்டார். இதெல்லாம் காமெடியாக அத்தனைக்கும் எங்களிடம் ஆதாரம் இருக்கிறது.

இவர் மீது செட்டில் இருக்கும் பெண்கள் குற்றம் சாட்டுகிறார்கள் என்று பல விஷயங்களை போட்டு உடைத்தார். இதன் மூலம் திவாகரின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில், தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்து இருந்த திவாகர், அந்த பேட்டியின் போது சில விஷயங்களால் திவாகருக்கும் சேனலை சேர்ந்தவருக்கும் வாக்குவாதம் ஏற்பட உடனே கையில் இருந்த மொபைலில் வீடியோ எடுத்த திவாகர் என்னை அடிக்கிறாங்க மக்களே நான் கமிஷனர் அலுவலகத்திற்கு செல்ல போகிறேன் என கத்தி கூப்பாடு போட்டார்.

மேலும், சேனலின் கேமராவை எடுத்துக் கொண்டு போகிறேன் எனச் சொல்லி பிடுங்க முயல அது சேதம் அடைந்து விட்டது. இது தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது. இந்த விஷயத்தை கவனித்த ரசிகர்கள் திவாகரை யாராவது அடக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

