Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»இங்கேயே வந்து தங்கிடலாம்னு பார்க்கிறேன்.. முதியோர் இல்லத்தைத் திறந்து வைத்த சிவகுமார் அறிவுரை..!
    கோவை

    இங்கேயே வந்து தங்கிடலாம்னு பார்க்கிறேன்.. முதியோர் இல்லத்தைத் திறந்து வைத்த சிவகுமார் அறிவுரை..!

    Prime ReporterBy Prime ReporterMarch 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Sivakumar Utv.jpg 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    “நானும் இங்கேயே வந்து தங்கிடலாம்னு பார்க்கிறேன்!” – சூலூரில் நடிகர் சிவகுமார் நெகிழ்ச்சி : பெற்றோரை கைவிட்டால் பாவம் சும்மா விடாது என உருக்கம்.

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள லட்சுமி நாயக்கன்பாளையத்தில், வள்ளலார் இயற்கை நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் சுமார் 7000 சதுர அடியில் 14 அறைகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய முதியோர் காப்பகக் கட்டிடத் திறப்பு விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் சிவகுமார், கத்தரிக்கோலை கையில் எடுத்தபோது “இங்கு வயதில் மூத்தவர்தான் ரிப்பன் வெட்ட வேண்டும், நான்தான் இங்கு மூத்தவன் அதனால் நானே வெட்டுகிறேன்” என நகைச்சுவையாகப் பேசி ரிப்பனை வெட்டி கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அறைகளைப் பார்வையிட்ட அவர், “நானும் இங்கேயே வந்துவிடலாம் என நினைக்கிறேன், இங்குள்ள சாமியாரைப் போல இருக்கலாம் எனத் தோன்றுகிறது” எனப் புன்னகையுடன் தெரிவித்தார்.


    இந்த விழாவிற்கு வள்ளலார் இயற்கை நல்வாழ்வு அறக்கட்டளை அறங்காவலர் ஸ்ரீலஸ்ரீ மூர்த்திலிங்க தம்பிரான் சுவாமி தலைமை தாங்கினார். கோவை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் A.R. சுப்பிரமணியம் தலைமை வகிக்க, திருப்பூர் மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு. நீறணி பவளக்குன்றன் ஜோதிக் கொடியினை ஏற்றி வைத்தார். அறக்கட்டளை பொருளாளர் அருள்நிதி. இராம அவிநாசிலிங்கம் ஜோதி வழிபாட்டை நடத்தினார். நிகழ்வில் திருமதி. M. அங்கம்மாள் A.P. முத்துசாமி, திரு. R. சரஸ்வதி ரத்தினசாமி, ராம்ராஜ் காட்டன் நாகராஜன் மற்றும் சென்னை சில்க்ஸ் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.


    விழாவில் நெகிழ்ச்சியுடன் பேசிய சிவகுமார், “பிள்ளைகள் தாய் தந்தையரை உயிருள்ளவரை நேசிக்க வேண்டும், அவர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமல் கடைசி வரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் என் அம்மாவை இறக்கும் வரை ஒரு ராணி போலத்தான் வைத்திருந்தேன். நான் கல்வி அறக்கட்டளை தொடங்கியபோது அதற்கான பணத்தை எம்.ஜி.ஆரிடம் என் அம்மாதான் கொண்டுபோய் கொடுத்தார்.

    பெற்றோரை கவனிக்காமல் விட்டால் அந்தப் பாவம் யாரையும் சும்மா விடாது. கடவுள் என்று யாரும் இல்லை, கடவுளுக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது” எனத் தனது உரையில் குறிப்பிட்டார்.

    Actor Sivakumar Coimbatore District News Coimbatore Old Age Home Old Age Home Opening Sivakumar Emotional Speech Sulur News Vallalar Trust கோவை மாவட்ட செய்திகள் கோவை முதியோர் இல்லம் சிவகுமார் நெகிழ்ச்சிப் பேச்சு சூலூர் செய்திகள் நடிகர் சிவகுமார் முதியோர் காப்பகம் திறப்பு வள்ளலார் அறக்கட்டளை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.