Close Menu
    What's Hot

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»சதக்., சதக்.. யாருக்கும் கிடைக்கக்கூடாது.. கோவையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ரத்த ஆறு..!
    கோவை

    சதக்., சதக்.. யாருக்கும் கிடைக்கக்கூடாது.. கோவையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ரத்த ஆறு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    murder Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, நாகம்மநாயக்கன்பாளையத்தில் கள்ளக் காதல் விவகாரத்தில் திலீபன் என்ற ஹோட்டல் அதிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக லாரி உரிமையாளர் பிரேம் ஆனந்த் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    அவர் காவல் துறையிடம் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறும் போது:

    அவருக்கு ஏற்கனவே மூன்று திருமணம் நடந்து உள்ளது. இதில் அவரது முதல் மனைவி இறந்து விட்டார். அவர் இறந்த பின்பு இரண்டாவது ஒரு பெண்ணை திருமணம் செய்ததாகவும், ஆனால் அவர் அவரிடம் விவாகரத்து பெற்று சென்று விட்டதாகவும், அதன் பின்னர் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருடன் குடும்பம் நடத்தி வந்ததாகவும், ஆனால் அவரும் சில மாதங்களிலே வேறொரு நபருடன் ஓடி விட்டதாக தெரிவித்தார்.

    இதனால் தனியாக வசித்து வந்ததாகவும், அப்பொழுது அவரது வீட்டின் அருகே இருந்த 37 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்ததாகவும், அவரை நான்காவதாக திருமணம் செய்ய நினைத்து உள்ளார்.

    ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாகவும், மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் அந்த பகுதியில் உள்ள திலீபன் ஹோட்டலில் வேலை செய்தார். இது அவருக்கு பிடிக்கவில்லை, அவரை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றும் கூறி உள்ளார்.

    ஆனால் அவர் அதனை கேட்கவில்லை, தொடர்ந்து வேலைக்கு சென்று வந்து உள்ளார். அத்துடன் ஹோட்டல் உரிமையாளரான திலீப்பனுடன் அந்தப் பெண் கள்ளக் காதல் வைத்து இருந்ததும் அவருக்கு தெரியவந்தது. அவரை விட்டு, விட்டு அவருடன் சென்றது அவருக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது.

    இதனால் கடந்த ஜனவரி மாதம் 4 ம் தேதி அவர் அந்தப் பெண்ணை கொலை செய்வதற்காக, அவர் வேலை பார்த்து வரும் ஹோட்டலுக்குச் சென்றதாகவும், அப்பொழுது அவரிடம் தகராறு ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தியதாகவும், அதனால் அதனை தடுக்க முயன்ற திலீப்பனையும் கத்தியால் குத்தியதாகவும் தெரிவித்தார்.இதனால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    17 நாட்கள் சிறையில் இருந்து விட்டு சில நாட்களுக்கு முன்பு தான் வெளியே வந்ததாகவும், வெளியில் வந்த பின்னரும் ஹோட்டல் அருகே இருப்பவர்களிடம் அந்தப் பெண் குறித்தும், திலீபன் குறித்தும் விசாரித்ததாகவும், அப்போது அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக ஊர் சுற்றுவது தெரிய வந்ததாகவும், தான் நான்காவது திருமணம் செய்ய இருந்த பெண்ணை திலீபன் அபகரித்து விட்டதாகவும், இதற்காக அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி விட்டு நேற்று அதிகாலை அவரது வீட்டிற்கு சென்று கதவை தட்டியதாகவும், அந்த பெண்ணும் கதவை திறந்து வெளியே வந்த போது அப்பொழுது வீட்டிற்கு திலீபனும் கட்டிலில் படுத்து இருந்து உள்ளார்.

    இது லாரி உரிமையாளர் பிரேம் ஆனந்துக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் அங்கு இருந்த கத்தியை எடுத்து கட்டிலில் படுத்து இருந்த திலீப்பனை சரமாரியாக குத்தியதாகவும், மேலும் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் கூறியவர், இதனால் அவர் உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்தார்.

    அந்தப் பெண் அதனை தடுக்க முயன்றதால், அவரையும் கத்தியால் குத்தியதாகவும், இதில் அவரும் பலத்த காயம் அடைந்தார். தனக்கு கிடைக்காத காதலி யாருக்கும் கிடைக்கக் கூடாது என நினைத்து அந்தப் பெண்ணுடன் ஒன்றாக சாகலாம் என முடிவு செய்து, அதற்காக வீட்டில் சமையல் அறையில் இருந்த கேஸ் சிலிண்டரை எடுத்து வந்து கேஸ் திறந்து விட்டு தீயை பற்ற வைத்தது தற்கொலைக்கு முயன்றதாகவும், ஆனால் தீ எரிவதை பார்த்து அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து, காவல்துறைக்கு தகவல் கொடுத்ததால், காவல் துறையிடம் சிக்கிக் கொண்டதாகவும், லாரி உரிமையாளர் பிரேம் ஆனந்த் வாக்கமூலத்தில் தெரிவித்து உள்ளதாக காவல்துறையினர் கூறினர்.

    4-வது திருமண விவகாரம் Coimbatore Crime News Today Extra Marital Affair Murder Fourth Marriage Dispute Crime Hotel Owner Dileepan Murder Lorry Owner Prem Anand Arrest Sulur Crime Investigation Sulur murder case கள்ளக்காதல் கொலை கோவை கோவை குற்றச்செய்திகள் கோவை சூலூர் கொலை சூலூர் திலீபன் கொலை வழக்கு லாரி உரிமையாளர் கைது ஹோட்டல் அதிபர் திலீபன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026
    Don't Miss

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    கோவை இடிகரை டாஸ்மாக் அருகே நண்பனுக்காகச் சமாதானம் பேசச் சென்ற வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கி மண்டையை உடைத்த இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.