Close Menu
    What's Hot

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»இந்தியா»”கேரளாவில் பறவை காய்ச்சல் உறுதி வாளையார் சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு”
    இந்தியா

    ”கேரளாவில் பறவை காய்ச்சல் உறுதி வாளையார் சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு”

    Prime ReporterBy Prime ReporterDecember 26, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கேரள மாநிலம் கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோழிகள் மற்றும் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது இதையடுத்து உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உயிரிழந்த கோழிகள் மற்றும் வாத்துகள் பறவை காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் பறவை காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்க கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது அதன்படி தமிழக–கேரள எல்லை சோதனை சாவடிகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

    அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள வாளையார் சோதனை சாவடியில் சுகாதாரத் துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் இறைச்சி வாகனங்கள் மேலும் கோவையிலிருந்து இறைச்சிகளை ஏற்றி சென்று திரும்பும் வாகனங்கள் அனைத்திற்கும் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகின்றன.

    மேலும் வாகனங்கள் எங்கிருந்து வருகிறது எங்கு செல்கிறது என்பதற்கான விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது இந்த பரிசோதனைகளுக்குப் பின்னரே வாகனங்கள் கோவை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன

    முதல் கட்டமாக வாளையார் சோதனை சாவடியில் இந்த தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் தமிழக–கேரள எல்லையில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் இதுபோன்ற முகாம்கள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    4 நாட்களில் 13 மில்லியன் ஃபாலோவர்ஸ்.. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் X பக்கம் முடக்கம்..!

    May 21, 2026

    நாட்டில் பொருளாதாரப் புயல்… மிட்டாய் கேக்குதா?.. மோடியை அட்டாக் செய்த ராகுல் காந்தி..!

    May 20, 2026

    மீம்களைத் தாண்டி நிஜமான ‘மெலோடி’ ட்ரெண்ட்.. மெலோனிக்கு ‘Melody’கிஃப்ட் செய்த பிரதமர் மோடி..! (வீடியோ)

    May 20, 2026

    வெளிநாட்டுப் பயணங்களுக்குப் புதிய வரியா?.. மத்திய அரசின் திடீர் விளக்கம்..!

    May 16, 2026

    தட்டாஞ்சாவடியில் மாஸ் வெற்றி.. புதுச்சேரியின் ‘மக்கள் முதல்வர்’ ரங்கசாமி சாதனை..!

    May 4, 2026

    உஷார்.. ஊருக்குள் படையெடுக்கும் விஷப் பாம்புகள்.. பகீர் கிளப்பும் பின்னணி..!

    April 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026
    Don't Miss

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    கோவை துடியலூரில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற நில அளவையர்கள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.