Author: Prime Reporter
நடிகை ராதிகா நடிப்பில் வெற்றி நடைபோடும் ‘தாய் கிழவி’ திரைப்படம் மார்ச் 26 முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனைகட்டி வனப்பகுதியில் யானை தாக்கி பாலக்காட்டைச் சேர்ந்த 56 வயது நபர் உயிரிழப்பு; ஒரு வாரத்திற்குப் பிறகு அழுகிய நிலையில் சடலம் மீட்பு.
Chinna Marumagal என்ற தொடர், விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் Swetha. இந்த நிலையில், ஸ்வேதாவின் கணவர் என கூறப்படும் Aadhi சமீபத்தில் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த பேட்டியில், தாங்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாகவும், ஆனால் ஸ்வேதாவின் பெற்றோர் அந்த உறவை ஏற்காததால், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னிடம் இருந்த வழக்கு தொடர்பான காரணத்தைக் காட்டி தான் ஸ்வேதாவின் குடும்பம் தன்னை நிராகரித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவரது கூற்றுப்படி, ஸ்வேதா தன்னிடம் கொண்டிருந்த காதலால் தான் திருமணம் நடைபெற்றதாகவும், இந்த திருமணம் குறித்து மிகவும் குறைந்த பேருக்கே தெரியும் என்றும் தெரிவித்துள்ளார். பொதுவாக இருவரும் வெளியில் சேர்ந்து வராததற்குக் காரணம், தனது காரணமாக ஸ்வேதாவின் நடிப்பு வாழ்க்கையில்…
திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் சிறுமியின் உயிர் பறிபோனதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளியின் உள்ளே, போதையில் இருந்த நபர் இயக்கிய கார் மோதி 4 வயது மாணவி பலியானதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சிலிண்டர் தட்டுப்பாடு.. பாஜக அரசு என்ன செய்கிறது? முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி! திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால் தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால், பள்ளியில் இருந்த சிறுமியின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதற்கு மத்தியில், பள்ளிக்கல்வித்துறையினர், வருவாய்த்துறையினர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் என ஒருவர் கூட சம்பவ இடத்திற்கு வராத கொடூரமும் அரங்கேறியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் தோல்வி பயத்தில், தனது அடிப்படை கடமையைக் கூட திமுக அரசு மறந்துவிட்டதா? அரசு இயந்திரம் ஒட்டுமொத்தமாக செயலிழந்து விட்டதா? மொத்தத்தில், பச்சிளம் குழந்தையின் மரணத்திற்கு நீதியை…
கோவை பெரியநாயக்கன்பாளையம் தனியார் பள்ளி விடுதியில் விறகு உடைக்க மரத்தில் ஏறிய 12-ம் வகுப்பு மாணவர் நந்தகுமார் தவறி விழுந்து இடுப்பு எலும்பு முறிந்து படுகாயமடைந்தார்.
வளைகுடா நாடுகளின் போரால் நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு சமீப நாட்களாக ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டருக்கு பாதிப்பு இல்லை என மத்திய அரசு கூறினாலும், சிலிண்டர் புக் செய்து ஒரு மாதமாகியும் இன்னும் வராத நிலையில் இல்லத்தரசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “கோவிட் காலத்தைப் போல” என மாண்புமிகு பிரதமர் அவர்கள் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. அரசு இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை script-ஐத் தற்போது கையிலெடுத்துள்ளது. யாருமே நெருங்க முடியாது… வசூலில் பிரம்மாண்டம் காட்டிய துரந்தர் 2! பா.ஜ.க. ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே…
கோவை ஆர்.எஸ்.புரத்தில் புதிய கடை திறப்பு விழாவில் திருநங்கைகள் அத்துமீறி நுழைந்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் வணிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா? தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததால் பக்தர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
Ranveer Singh – Aditya Dhar கூட்டணியில் உருவான துரந்தர் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானபோது எதிர்பாராத அளவில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. அதனால் அதன் தொடர்ச்சியாக உருவான துரந்தர்: தி ரிவெஞ்ச் திரைப்படம் ஆரம்பத்திலேயே ரசிகர்களிடையே மிகப்பெரிய ஹைப் உருவாக்கியது. அந்த எதிர்பார்ப்புகளின் மத்தியில் மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம், முதல் நாளிலிருந்தே பேசுபொருளாக மாறியது.கதை, காட்சிகள், அரசியல் பின்னணி உள்ளிட்ட பல அம்சங்களில் கலவையான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்தாலும், வசூல் வேகத்தில் எந்த வித தளர்வும் இல்லாமல் தொடர்ந்து முன்னேறி வருகிறது. குறிப்பாக, தென்னிந்தியாவில் வசூல் சாதனைகளை பதித்த Pushpa 2 படத்தின் பல முக்கிய ரெக்கார்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக முறியடித்து, துரந்தர் 2 தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. இது பாலிவுட் மட்டுமின்றி இந்திய சினிமா முழுவதும் இந்தப் படத்தின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. https://utnnow.com/2026/03/25/without-causing-any-rift-in-the-friendship-the-gentleman-praised-kamal-as-his-brother-with-great-courtesy-250326/ இந்நிலையில், வெளியான 6…
தேர்தல் பறக்கும் படையினரின் பணப் பறிமுதலைக் கண்டித்து மார்ச் 31-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு நடத்தப்படும் என விக்ரமராஜா கோவையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
