நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா சரத்குமார் விருது வழங்கும் விழாவில் இணைந்து நடனமாடி உள்ளார்.
தனியார் ஊடகத்தின் விருது வழங்கும் விழாவில் கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை நடிகை ராதிகா அவருக்கு வழங்கினார்.
விருது வழங்கும் மேடையிலேயே ‘தாய் கிழவி வரா ஒதுங்கிக்க’ (திருச்சிற்றம்பலம் படப்பாடல்) பாடலுக்கு இருவரும் இணைந்து மிகவும் உற்சாகமாகவும் அழகாகவும் நடனமாடினர். இவர்களின் இந்த நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொஞ்சம் டைம் எடுத்துக்கோங்க.. சமந்தாவின் புதிய புராஜெக்ட்..!
ஏற்கனவே நெருங்கிய தோழிகளாக இருந்த இவர்கள், ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்தில் இணைந்து நடித்த பிறகு இவர்களின் நட்பு மேலும் பலமடைந்துள்ளது. ராதிகா மேடையில் கீர்த்தி சுரேஷின் திறமையைப் பாராட்டிப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.
தாய் கிழவி பாட்டுக்கு ஆடிய கீர்த்தி சுரேஷ் 😍🥰❤️ pic.twitter.com/MMWC7SVxt3
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) July 4, 2026

