கடந்த மாதம் ஆத்தூரில் நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்ற திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக த.வெ.க. (தமிழக வெற்றிக் கழகம்) நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அவர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கட்டணம் செலுத்திய பின் கேட்கிறீர்களா?.. அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த ‘பலே’ பதில்..!
அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டது சரியான நடவடிக்கை என்றும், வாய்க்கு வந்ததெல்லாம் பேசினால் எல்லோரும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

