Author: Prime Reporter
தமிழக அரசு இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தது. பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சனம் செய்து வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தை பாராட்டியுள்ளார். இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தல பதிவில், தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை மாண்புமிகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும், இடைக்கால வேளாண் பட்ஜெட்டை மாண்புமிகு உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்களும் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த நிகழ்வில் நாம் பங்கேற்றோம். தமிழின தொன்மையை விளக்கும் அருங்காட்சியகங்கள் முதல் நவீன உலகிற்கான செயற்கை நுண்ணறிவு – அறிவுசார் பொருளாதார வளர்ச்சி வரை அனைத்திலும் கவனம் செலுத்தி உள்ளது நமது #திராவிடமாடல் பட்ஜெட்! ஏழை-எளிய மக்கள் நலனை மையமாகக் கொண்ட திட்டங்களை செயல்படுத்தி, இந்தியாவின் எந்த மாநிலமும் எட்டிப்பிடிக்க முடியாத வளர்ச்சியை தமிழ்நாட்டில் சாத்தியமாக்கி இருக்கும்…
சைரன் சத்தம் ஒலிக்க காட்டுப் பன்றிகள் ஓட்டமிட்ட சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலையத்தில் சிகரெட் மற்றும் இ-சிகரெட் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு, சம்பளம் மற்றும் முதலீட்டு விவரங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது
உருளைக்கிழங்கு சாதம் எளிய முறையில் வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி என்பதை இந்த குறிப்பில் அறியலாம்.
மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்ட மு.க.அழகிரியின் முக்கிய ஆதரவாளரான பி.எம். மன்னன் இன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சியில் இணைந்தார். ஒருகாலத்தில் “மதுரை திமுக” என்றாலே அழகிரியின் கோட்டை எனப் பேசப்பட்ட நிலையில், கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்ட பிறகு அந்த ஆதிக்கம் குறைந்தது. அந்த காலகட்டம் முழுவதும் அவரின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தவர் மன்னனே. 2014ஆம் ஆண்டு, கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி, அழகிரியை கட்சியில் இருந்து நீக்கினார். அப்போதும் அவருடன் இருந்து ஆதரவு தெரிவித்தவர் மன்னன் தான். கடந்த வாரம் முதலே அவர் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன் தொடர்ச்சியாக, இன்று தனது ஆதரவாளர்களுடன் மன்னன் அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். நீண்ட நாட்களாக அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தரப்பில் இருந்து அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், திமுகவில் சேரும் விருப்பத்தையும் அவர்…
இந்திய ஜனநாயக கட்சியில் பொது செயலாளராக இருந்தவர் லாட்டரி அதிபர் மார்டினின் மனைவி லீமா ரோஸ். இவர் த.வெ.க கட்சியில் முக்கிய பிரமுகராக உள்ள ஆதவ் அர்ஜுனாவின் மாமியார். லீமா ரோஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 14 ஆண்டுகளாக கட்சியில் இருந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும், தனக்கு எந்த வாய்ப்பும் வழங்கவில்லை என சமீபத்தில் பேட்டி ஒன்றில் லீமா ரோஸ் வெளிப்படையாக கூறி இருந்தார். மேலும் அவரது மகன் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார். இதனால் திமுக, லட்சிய ஜனநாயக கட்சி அல்லது த.வெ.க கட்சியில் லீமா ரோஸ் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. அனால் இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். மேலும் வரும் தேர்தலில், திருவாடானை அல்லது கோவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமியை லீமா ரோஸ் சந்தித்து பேசிய நிலையில்,…
வேலூர் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய மயான கொள்ளை திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, கழிஞ்சூர் பகுதியில் இருந்து சுமார் 60 அடி உயரம் கொண்ட பிரமாண்ட தேர், வாகனத்தின் மீது அமைக்கப்பட்டு பாலாற்றை நோக்கி விருதம்பட்டு மேம்பாலம் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. பாலாற்றில் நடைபெற்ற சூறை மற்றும் சிறப்பு பூஜைகள் நிறைவடைந்த பின்னர், தேரை மீண்டும் கழிஞ்சூர் பகுதிக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கின. அப்போது எதிர்பாராத விதமாக தேர் ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது இதனால் தேர் திடீரென இடதுபுறமாக சாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் தேரின் மீது அமர்ந்திருந்த பக்தர்களும், அருகில் நின்று விழாவைக் கண்டுகொண்டிருந்த பொதுமக்களும் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்பு பணிகளில்…
அண்ணாமலை பாஜக செய்தியாளர் சந்திப்பில் அரசியல் குற்றச்சாட்டுகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் குறித்து விளக்கமளித்தார்.
ஸ்லேட் பென்சிலை சாப்பிடும் பழக்கத்தின் உடல்நல பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
