தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் மொத்தம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது மட்டும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்ததை அடுத்து தற்பொழுது, 112 எம்எல்ஏக்களையும் தன்வசம் வைத்துள்ளார்கள்.
முன்னதாக, தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
பெரும்பான்மைக்கு முட்டுக்கட்டை.. தவெக-வோடு கைகோர்க்க மறுக்கும் அதிமுக..!
இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சியை திமுக எம்பி ஆ. ராசா கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரம் காயாத ‘கை’யால் நெரிபட்டு மரணித்தது ‘அரசியல் நெறி’ மட்டுமல்ல; அவசியமான ‘அடிப்படை நாகரீக’மும் தான்! வாழ்க ஜனநாயகம்!! என்று அதில் பதிவிட்டுள்ளார்.
ஈரம் காயாத
— A RAJA (@dmk_raja) May 6, 2026
‘கை’யால்
நெரிபட்டு மரணித்தது
‘அரசியல் நெறி’ மட்டுமல்ல;
அவசியமான
‘அடிப்படை நாகரீக’மும் தான்!
வாழ்க ஜனநாயகம்!!

