கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரே, பொது வெளியில் மாற்று திறனாளி ஒருவர் தனது பையுடன் தினமும் காலை வேலையில் வந்து அங்குள்ள பகுதிகளில் அமர்ந்து கொண்டு சுமார் 30 முதல் 50 வரையிலான மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றார்.
குறிப்பாக 140 ரூபாய்க்கு அரசு மதுபான கடைகளில் வழங்க படும் மதுபாட்டில்களை சுமார் 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்கின்றார். இவருக்காக காத்திருக்கும் பல மது பிரியர்கள், அதிக விலை குடுத்து இவரிடம் மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.
காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!
இந்த சம்பவம் தினமும் நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாக தான் உள்ளது என அங்கு கடை வைத்துள்ளவர்கள் கூறி வரும் நிலையில் காவல்துறையினர் இவரை கண்டு கொள்வதில்லை, மாற்று திறனாளி என்பதால் காவல்துறை கரிசணம் காட்டுகின்றனரா என கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
இந்த மாற்று திறனாளி அதிக விளைக்கு கள்ள சந்தையில் மது விற்பனை செய்வதை தனது செல்போனில் படமாக எடுத்த சமூக ஆர்வலர்கள் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்து உள்ளனர்.

