தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மற்றும் நடிகை திரிஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு நடிகையும் பாஜக மாநில துணைத் தலைவருமான குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொது மேடையில் நடிகை திரிஷாவை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள குஷ்பு, “தவறை ஒப்புக்கொண்டு திரிஷாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் தைரியமும் கண்ணியமும் உதயநிதியிடம் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கைதுக்கு பயப்படுபவன் நான் அல்ல.. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்..!
தவெக மகளிர் அணி அளித்த புகாரின் பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

