கனிமவளங்களை பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்துத் தாக்கல் வழக்கு செய்யப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி, கட்டுமானக் கற்கள் மற்றும் எம்-சாண்ட் போன்ற கனிமவளங்களைக் கொண்டு செல்ல தமிழக அரசு 3 மாதங்களுக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது.
மாநிலத்தில் செயற்கைத் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், கட்டுமானப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்தத் தடைக்கு அண்டை மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக, கேரள முதல்வர் வி.டி.சதீசன், கனிமவளத் தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வயிற்று வலியால் வடமாநிலத் தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்.. வீடு திரும்பாததால் அதிர்ச்சி..!
இந்நிலையில், கனிமவளங்களை வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, கன்னியாகுமரியைச் சேர்ந்த லிபின் பொன்னுசாமி லீசா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

