நீட் தேர்வு விவகாரம் மற்றும் அதனால் மாணவர்கள் எதிர்கொண்ட குழப்பங்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தைப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் சட்டச்சிக்கல்களிலும் குழப்பங்களிலும் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகத் தான் இந்தப் பதவியை விட்டு விலகுவதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மச்சங்களைப் பார்க்கலாமா?.. ஜான்வி கபூருக்கு மெசேஜ் அனுப்பிய நடிகர்..!
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசின் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துவந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவர்களும் இளைஞர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

