மருத்துவ நுழைவுத் தேர்வான ‘நீட்’ தேர்வுக்கு (NEET) எதிராகத் தமிழகத்தில் நடந்து வரும் எதிர்ப்புகள் மற்றும் விவாதங்களின் ஒரு பகுதியாக, நடிகை ஜோதிகா நீட் தேர்வுக்கு எதிரான குரல் கொடுத்துள்ளார்.
நீட் தேர்வு முறையால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்துப் பலரும் பேசி வரும் நிலையில், நடிகை ஜோதிகா இந்த விவகாரத்தில் இணைந்துள்ளது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
அதிர்ஷ்டமா?.. துரதிஷ்டமா?.. காக்கை ஒலிகள் உணர்த்தும் மறைமுகச் செய்திகள்..!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஜோதிகா வலியுறுத்தியுள்ளார். நாட்டின் எதிர்காலமான மாணவர்களுக்காகவும், ஜனநாயகம் மற்றும் சீர்திருத்தப்பட்ட கல்வி முறைக்காகவும் தான் துணை நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள Gen Z தலைமுறையினரை எண்ணி ஒரு தாயாகப் பெருமைப்படுவதாகவும், ‘நாம் தான் இந்தியா’ என்பதை அவர்கள் நிரூபித்துள்ளதாகவும், பயத்தை உடைத்து எறிந்ததற்கு நன்றி தெரிவித்து ‘ஜெய் ஹிந்த்’ எனவும் தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.

