தெலங்கானாவின் வாரங்கல் பகுதியில் நடந்த அந்த மென்பொருள் பொறியாளர் தொடர்பான சம்பவத்தின் கூடுதல் மற்றும் அதிர்ச்சிகரமான விவரங்கள் வெளியாகி உள்ளது. கோயில் வளாகத்திற்குள் நுழைந்த மென்பொருள் பொறியாளர் நள்ளிரவு நேரத்தில், எந்தவித ஆடைகளும் இன்றி வாரங்கல் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்குள் நுழைந்துள்ளார்.
அங்கிருந்த கோயிலின் மூலவர் சிலையைக் கையில் ஏந்தியபடி, அவர் நீண்ட நேரம் கோயில் வளாகத்தைச் சுற்றி வந்துள்ளார். அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் இது பதிவாகியுள்ளது. மென்பொருள் பொறியாளர் சிலையுடன் சுற்றி வந்த அடுத்த 30 நிமிடங்களில், நிலைமை மோசமடைந்தது. கோயில் வளாகத்திற்குள் இருந்த குளம் அருகே சென்ற அவர், திடீரென குளத்திற்குள் குதித்துள்ளார்.
லூட்டி செய்யும் பசங்க.. திரையைத் தாண்டி பிஸியான ஏமி ஜாக்சன்..!
இதுவே அவரது உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்தது. மேலும், அவர் நீண்ட நாட்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதுவே இத்தகைய தீவிரமான செயலுக்கு அவரைத் தூண்டியிருக்கலாம் என்றும் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். அவர் குளத்தில் குதிக்கும் வரை சிசிடிவி காட்சிகள் அனைத்தையும் ஆய்வு செய்ததில், வேறு நபர்களின் தலையீடு எதுவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, இது தற்கொலைதான் என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

