பழனிக்கு மொட்டை போட்டவர் யார் என்று காலப்போக்கில் தெரியவரும் முதல்வர் விஜய் ஆட்சியில் இருக்கும் வரை எந்தவிதமான தவறுகள் நடந்து விடக்கூடாது என்பதற்காக கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார் ஆம்னி கட்டணம் அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கருத்து அரசு வளர்ச்சி பாதைக்கு செல்கிறது என்று அர்த்தம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் டெண்டர்கள் கூடுதலாக விடப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முதலமைச்சர் பதவியில் இருக்கும் வரை எந்தவிதமான தவறுகளும் நடந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகச் செயலாற்றி வருகிறார்.நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கான டெண்டர்கள் அடுத்த ஆண்டு வரை நடைமுறையில் உள்ளன. எனவே, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
காரணமில்லாமல் எந்த ஒரு டெண்டரையும் ரத்து செய்ய முடியாது.
5 கவுன்சிலர்கள் 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. மாமன்றத்தில் தள்ளுமுள்ளு – கூட்டத்தில் பெரும் அமளி..!
கூடுதல் மதிப்பீடு (Over-estimation) செய்யப்பட்டிருந்தால் மட்டுமே ரத்து செய்ய முடியும். தற்போது முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில், தெளிவான முடிவுகள் எடுக்கப்பட்டதன் அடிப்படையில் தான் சில டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தின்படியே ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என்கிற கருத்து குறித்துக் கேட்கிறீர்கள்.அரசு என்ன கட்டணத்தை நிர்ணயிக்கிறதோ, அதன்படி செயல்படுகிறோம்’ என்று தனியார் தரப்பு கூறுவது, அரசு சரியான வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்பதையே காட்டுகிறது.
சமூகத்தில் போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, போதைப்பொருள் புழக்கம் முற்றிலும் குறைக்கப்படும். மேலும், எடப்பாடி பழனிச்சாமி குறித்து, பழனிக்குச் சென்று மொட்டை போட்டவர் யார் என்பது குறித்த உண்மை, காலப்போக்கில் அனைவருக்கும் தெரியவரும், என்று தெரிவித்தார்.

