கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட லிங்காபுரம் பகுதியில் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு தாயை பிரிந்த குட்டி யானை ஒன்று சாலையில் சுற்றி திரிந்தது இதை அடுத்து வனத்துறையினர் யானை குட்டியை மீட்டு அதன் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் பல்வேறு கட்ட முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் (WTTC) வைத்து கடந்த இரண்டு மாதங்களாக பராமரிக்கப்பட்டு வந்தது.
அரசியல் விமர்சனங்கள் செய்றதுல தப்பு இல்லை.. மத்திய நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ்..!
இந்நிலையில், கூடுதல் பராமரிப்பு மற்றும் மறுவாழ்விற்காக ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் , கோழி கமுத்தி யானைகள் முகாமிற்கு இன்று பாதுகாப்பாக யானை குட்டி வனத்துறை வாகனத்தில் ஏற்றி அனுப்பப்பட்டது. அந்த முகாமில் அனுபவம் வாய்ந்த பாகன்கள் மற்றும் மருத்துவர்கள் உதவியுடன் மேற்படி யானை குட்டி சிறப்பாக பராமரிக்கப்பட உள்ளதாக வனத்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர்.

