சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம் போன்ற மக்கள் பிரதிநிதிகள் கூடும் அவைகளில், அரசியல் ரீதியான விமர்சனங்கள் மற்றும் காரசாரமான விவாதங்கள் முன்வைக்கப்படுவது ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான் என்றும், அதில் எந்தத் தவறும் இல்லை என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
அவைகளில் காரசாரமான அரசியல் விமர்சனங்கள் எழுந்தாலும், அவை மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முடக்கிவிடக் கூடாது; மாறாக, நிதி மேலாண்மை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை அவர் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.
அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி நிகழ்வுகளில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த போது, நடப்பு அரசியல் நிகழ்வுகள் மற்றும் அவைகளின் செயல்பாடுகள் குறித்து இந்த முக்கியக் கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

