தவெக அரசின் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த வெள்ளை அறிக்கை முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கத்தோடு, திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது என்று சாடியுள்ளார்.
ஏதோ கடந்த இத்தனை ஆண்டுகளில் மின்சார வாரியத்தில் யாருக்குமே பணி உயர்வு வழங்கப்படாதது போலவும், பணிகள் முடங்கியது போலவும் தற்போதைய அமைச்சர் பேசுவதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் அறிவிப்பு காரணமாகவே சில பணி நியமனங்களும், பதவி உயர்வுகளும் மேற்கொள்ள முடியாமல் போனது என்று விளக்கம் அளித்துள்ளார்.
ரூ.58,000 கோடி முறைகேடு.. திமுகவை அதிரவைத்த அமைச்சர் நிர்மல் குமார்..!
கடந்த திமுக ஆட்சியில் மின்மாற்றி மற்றும் மின் உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், அரசுக்கு எந்தவித நிதி இழப்பும் ஏற்படவில்லை என்றும், தவெக அரசு தனது தோல்விகளை மறைக்க முந்தைய ஆட்சியின் மீது பழி போடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

